Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM
விருதுநகர் மாவட்டம், ராஜ பாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் ஆண் யானை இறந்து கிடந்தது.
ராஜபாளையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான சேத்தூர் காப்புக்காடு பகுதியில் தேவி யாறு வனப்பகுதியில் ஆண் யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
ராஜபாளையம் வனச்சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமு மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
புலிகள் சரணாலயத் துணை இயக்குநர் திலீப்குமார் முன்னிலையில் கால்நடை மருத்துவர் தமிழரசன் உடற்கூறு ஆய்வு செய்தார். இதில் யானை நோய்வாய்ப்பட்டு இறந்தது தெரிய வந்தது. அதே பகுதியில் குழி தோண்டி யானையின் உடலைப் புதைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT