Published : 01 Nov 2021 03:07 AM
Last Updated : 01 Nov 2021 03:07 AM
ஈரோடு: ஈரோட்டில் இரு நாட்கள் நடந்த கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், 42 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஈரோட்டில் 29 மற்றும் 30-ம் தேதிகளில் 7-வது கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. முதல்நாளில் 531, இரண்டாம் நாளில் 558 மையங்கள் என மொத்தம் 1089 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் தலா ஒரு மையம் வீதம் 60 மையங்கள், நான்கு சிறப்பு மையங்கள், 40 நடமாடும் வாகனங்கள் என 104 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஈரோடு நகரில் வீடு வீடாகச் சென்று கல்லூரி மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தி முதல் தவணை தடுப்பூசி போடாதவர்கள் விவரங்கள் சேகரித்து இருந்தனர். அதன் அடிப்படையில், அவர்களின் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போடப்பட்டது. இரு நாட்கள் நடந்த தடுப்பூசி முகாமில் 42 ஆயிரத்து 21 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT