Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
கரூர்: தீபாவளி பண்டிகையையொட்டி, கரூர் ஜவஹர் பஜாரில் தனியார் இனிப்பகத்தில் இனிப்பு, காரம் தயாரிக்கும் பணி மற்றும் விற்பனை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இக்கடையில் நேற்று காஸ் சிலிண்டரில் இருந்து காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊழியர்களே தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினர்.
தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு நிலையத்தினர், தீ பிடித்த பகுதியைப் பார்வை யிட்டு மீண்டும் தீ ஏற்படாமல் பாதுகாப்பாக செயல்பட அறிவுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT