Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
திருச்சி: திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். திமுகவின் 4-வது வட்டச் செயலாளரான இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை கத்தியால் குத்தி, தாக்கியுள்ளனர். இதில், காயமடைந்த கண்ணனை குடும்பத்தினர் மீட்டு, புத்தூரிலுள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்ணனைத் தாக்கியவர்கள் குறித்து ரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தபடி கண்ணன் ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ குறித்தும் ரங்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT