Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM

நாட்டு துப்பாக்கி பதுக்கிய இருவர் சிக்கினர் :

ஆம்பூர் அருகே பாலாற்றங்கரையோரம் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை பாலாற் றங்கரை யோரம் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த கொட்ட கையில் நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில் உமராபாத் காவல் துறையினர் அங்கு சோதனை நடத்தினர். அதில், நாட்டுத் துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக நடத்திய விசா ரணையில், ஆம்பூர் அடுத்த கம்மியம்பட்டு புதூரைச் சேர்ந்த சதீஷ் (25), விஜய் (31) ஆகிய இருவர் நாட்டு துப்பாகியை பதுக்கி வைத்தது தெரியவந்தது. இதுகுறித்து உமராபாத் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x