Published : 01 Nov 2021 03:08 AM
Last Updated : 01 Nov 2021 03:08 AM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே செங்கல் சூளையில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த சூளை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த செவ்வாத்தூர் கிராமத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருவதாக வந்த தகவலின் பேரில் எஸ்.பி., தனிப்படை காவல் துறையினர் செவ்வாத்தூர் ஊராட்சியில் தீவிர கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதியைச் சேர்ந்த இளங்கோ (50) என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளையில் பகல், இரவு நேரங்களில் வெளியாட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தன. எனவே, சந்தேகமடைந்த தனிப்படை காவல் துறையினர் செங்கல் சூளைக்குள் நுழைந்து சோதனை நடத்தியதில் அங்கு கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவது தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, செங்கல் சூளை உரிமையாளர் இளங்கோவை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT