Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

ஈரோடு கருங்கல்பாளையத்தில் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை :

ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஒட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக கருங்கல்பாளையம் காவிரி சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் அப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

இதனால் கருங்கல்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இப்பகுதியில் ஏராளமான நகைக் கடை, ஜவுளிக் கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் கடைகளுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் செல்கின்றனர். மக்கள் நலன் கருதி இச்சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி மக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x