Published : 24 Oct 2021 03:07 AM
Last Updated : 24 Oct 2021 03:07 AM

காவல்துறை -பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி :

காவல்துறையில் பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் வீரத்தைப் போற்றும் வகையில் நீத்தார் நினைவு தின வாரம் அனுசரிக்கப்படுகிறது.

இதையொட்டி மதுரை மாவட்டத்தில் பணியின்போது இறந்த காவல்துறையினருக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. மேலும், காவல்துறை-பொதுமக்கள் நல்லுறவு மினி மாரத்தான் போட்டி நடந்தது.

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து தொடங்கி அப்பன்திருப்பதி காவல்நிலையம் வரை சுமார் 8 கிலோ மீட்டர் நடைபெற்றது. மாரத்தான் போட்டியை காவல் கண்காணிப்பாளர் வி.பாஸ்கரன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ஊமச்சிகுளம் டிஎஸ்பி காட்வின் ஜெகதீஷ்குமார், ஆயுதப்படை டிஎஸ்பி விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த விளையாட்டு வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.3000, இரண்டாம் பரிசாக ரூ.2000, மூன்றாம் பரிசாக ரூ.1000 மற்றும் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x