Published : 24 Oct 2021 03:09 AM
Last Updated : 24 Oct 2021 03:09 AM

தொடக்க பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு :

திருவண்ணாமலை: தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த மேல்நாகரம் பேடு ஊராட்சி நடுநிலை தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அருள்வேலன் வரவேற்றார். தனியார் அமைப்புகள் மூலம் கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் அமைத்து கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை தொண்டு நிறுவன துணைத் தலைவர் ஜோ திறந்து வைத்தார். பள்ளிக்கு நூலகங்களை துணை பொது மேலாளர் ராபர்ட் வழங்கினார். 8-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வட்டார கல்வி அலுவலர் புவனேஸ்வரி வழங்கினார். இதில், தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி, ரதிதேவி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஆசிரியை ருக்குமணி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x