Published : 22 Oct 2021 03:07 AM
Last Updated : 22 Oct 2021 03:07 AM

கார் கவிழ்ந்த விபத்தில் இளைஞர் உயிரிழப்பு :

வாணியம்பாடி அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இளைஞர் உயிரிழந் தார். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.

வேலூர் அடுக்கம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் விக்ரம்ராஜ்(30). இவர், தனது நண்பர்கள் பாகாயம் பகுதியைச் சேர்ந்த தினேஷ்(30), நோவா(29), பிரசாந்த்(29), சபீஷன்(29) ஆகியோருடன் சுற்றுலா செல்ல காரில் ஆம்பூரை கடந்து சென்ற போது வளையாம்பட்டு முருகன் கோயில் அருகே கார் தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியது.

இதில், காரில் பயணித்த விக்ரம்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 4 பேரும் படுகாயமடைந்தனர். இந்த தகவலறிந்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x