Published : 18 Oct 2021 03:09 AM
Last Updated : 18 Oct 2021 03:09 AM
போத்தனூர் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் ஈச்சனாரி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த என்.மாயன் (51), ஆண்டிப்பட்டி கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்த பி.முருகானந்தம் (49) மற்றும் கேரள மாநிலம் எர்ணாகுளம் மூலவக்காடு பகுதியைச் சேர்ந்த பி.அந்தோணி (62) என்பதும், மூவரும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸார் மூவரையும் கைது செய்தனர்.
இதேபோல, கஞ்சா விற்றதாக உசிலம்பட்டியைச் சேர்ந்த கே.ஜெயவீரன் (53) என்பவரை சாயிபாபா காலனி போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT