Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
புதுச்சேரி ஆடிட்டர் அலுவலகத் தில் ரூ.13 லட்சம் பணம் திருடப் பட்டுள்ளது.
புதுச்சேரி அண்ணா சாலை யைச் சேர்ந்தவர் மிர்ஷா (48), ஆடிட்டர். இவரது வீட்டின் 2-வது மாடியில் அவரது அலுவலகம் இயங்கி வருகிறது. இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு வரு மான வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி கணக்குகளை கவனித்து வருகிறார். இதில் கடந்த 13-ம்தேதி 10-க்கும் மேற்பட்ட நிறுவ னங்கள் ஜிஎஸ்டி, வருமான வரிசெலுத்துவதற்காக கொடுத்தரூ.13 லட்சத்தை அலுவலக மேஜை டிராயரில் வைத்துள் ளார். பின்னர் இரவு வேலை முடிந்துஅலுவலகத்தை பூட்டிவிட்டு, மறுநாள் காலை வந்து பார்த்த போது, அலுவலக கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது டிராயரில் இருந்த ரூ.13 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து மிர்ஷா நேற்று முன்தினம் அளித்த புகாரின் பேரில் பெரியகடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT