Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

அக்டோபர் 20-ல் கல்வி கடன் மேளா :

மதுரை மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மதுரை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் பிற பள்ளிகளில் பயின்ற மாணவ, மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவும் ‘கல்விக் கடன் முனைப்பு திட்டம் மதுரை 2021-22’ செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் வரும் 20-ம் தேதி காலை 9 மணி முதல் ‘கல்விக் கடன் மேளா’ என்ற சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. அனைத்து வங்கி அதிகாரிகளும் கலந்து கொள்கின்றனர். இதில் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x