Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM

மதுரையில் தென் மண்டல சிலம்பாட்ட போட்டி :

உலக சிலம்ப விளையாட்டுக் கழகம் சார்பில், மதுரை டிவிஎஸ் நகரில் தென்மண்டல சிலம்பப் போட்டி நடைபெற்றது.

இதில் 8 மாவட்டங்களைச் சேர்ந்த 6 முதல் 12 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் 650 பேர் கலந்துகொண்டனர். தனிப்பிரிவில் ஒற்றைச் சிலம்பு, இரட்டைச்சிலம்பு, போரிடும் முறை உள்ளிட்ட போட்டிகளும், அலங்காரச் சிலம்பப் போட்டிகளும் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு உலக சிலம்ப விளையாட்டுக் கழகத் தலைவர் சுதாகரன் சான்றிதழ் வழங்கினார். துணைத் தலைவர் கார்த்திக், தேசிய அமைப்புச் செயலர் ராஜ், மாநில துணை அமைப்புச் செயலர்கள் அப்துல் ரபீக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x