Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

பூங்கா, அணைகளுக்கு செல்ல தடை நீட்டிப்பு :

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் அணைகள் மற்றும் பூங்காக்களை பொதுமக்கள் பார்வையிட விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் அணைகளை பார்வையிடவும், நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் கடந்த ஆகஸ்ட் மாதம் தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவு 3-வது மாதங்களாக தொடர்கிறது.

இதுகுறித்து ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பொழுதுபோக்கு பூங்காக்கள், அணைகள் மற்றும் நீச்சல் குளங்களை மக்கள் பயன்படுத்த அக்டோபர் 17-ம் தேதி வரை விதிக்கப்பட்ட தடை உத்தரவு, வரும் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x