Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM

நகர்புற தேர்தலை நேர்மையாக நடத்தினால் - அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் : முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை

அடுத்து வரும் நகர்புற தேர்தலை நேர்மையாக நடத்தினால் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தெரி வித்தார்.

அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிமுகவினர் மக்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி நேற்று கொண்டாடத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாநகர அதிமுக சார்பில் வேலூர் பழைய மாநகராட்சி அலுவலகம் அருகே எம்ஜிஆர், ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட அலுவல கத்தில் அதிமுக பொன்விழா ஆண்டை முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு அங்கு கூடியிருந்த அதிமுக நிர் வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, செய்தி யாளர்களிடம் கூறும்போது, "நாடு முழுவதும் அதிமுக பொன்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணை ப்பாளர் இபிஎஸ் தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவில் எப்போதும் சசிகலாவுக்கு இடமில்லை என்பது உறுதியான முடிவாகும். அதிமுகவை வழிநடத்த ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர்.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயகத்துக்கு எதிரான தேர்தலாகும். ஆளும் கட்சி பல சூழ்ச்சிகளை செய்து வெற்றி பெற்றுள்ளது.

பல இடங்களில் வாக்குப் பெட்டிகள் உடைக்கப்பட்டு திமுகவினர் வாக்குப்பெட்டிகளையே மாற்றியுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளன. எனவே, அடுத்து வரக்கூடிய நகர்புற தேர்தல் நேர்மையாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவால் அதிமுக சோர்வடைய வில்லை. எப்போதும் போல் நாங்கள் உற்சாகத்துடன்தான் இருக்கிறோம். இதை இந்த பொன் விழா ஆண்டு கொண்டாட்டத்தில் எல்லாரும் பார்க்கலாம். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜ மான ஒன்றுதான். அடுத்த வரும் நகர்புற தேர்தலை சந்திக்க அதிமுக தயாராகவே உள்ளது’’ என்றார். நிகழ்ச்சியில், வாணியம்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x