Published : 18 Oct 2021 03:13 AM
Last Updated : 18 Oct 2021 03:13 AM
திருவண்ணாமலை: அதிமுகவின் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு கலசப்பாக்கம் தொகுதியில் 50 இடங்களில் அதிமுக கொடியை முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஏற்றி வைத்தார்.
தி.மலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த விண்ணுவாம்பட்டு கிராமத்தில் உள்ள அதிமுக ஒன்றிய அலுவலகத்தில் மூத்த நிர்வாகிகளுக்கு நினைவு பரிசுகளை முன்னாள் எம்எல்ஏ பன்னீர்செல்வம் வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, “முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, ஆலமரம் போல் தழைத்து வளர்ந்துள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற நாள் முதல் உயிரிழக்கும் வரை முதல்வராக இருந்து தமிழகத்தையும், கட்சியையும் வழி நடத்தினார். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், எனக்கு பிறகும் நூறு ஆண்டுகள் வரை அதிமுக என்கிற இயக்கம் இருக்கும் என்றார். பல கோடி தொண்டர்களை உருவாக்கிய இயக்கத்தின் பொன்விழா நாளில் அனைத்து கிராமங்களிலும் கட்சி கொடிகளை ஏற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உள்ளோம்” என்றார். இதில், அதிமுக நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT