Published : 14 Oct 2021 05:57 AM
Last Updated : 14 Oct 2021 05:57 AM

கொள்ளையில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை :

திருச்சி: திருச்சி கே.கே.நகர் சிம்கோ மீட்டர் சாலை பகுதியிலுள்ள தேவராயர் நகரைச் சேர்ந்த ஜேம்ஸ் மகன் லியோ (எ) ரெனால்டு ரோஸ் லியோ. இவர் கடந்த 2014-ம் ஆண்டு உறையூர் நாச்சியார்பாளையத்திலுள்ள கல்விக்கூடம் ஒன்றில் ஆய்வக உதவியாளராக பயிற்சி பெற்று வந்த காயத்ரி என்பவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து உறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து லியோவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி பி.சாந்தி, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லியோவுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x