Published : 13 Oct 2021 05:49 AM
Last Updated : 13 Oct 2021 05:49 AM
பொள்ளாச்சி: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், வால்பாறையிலிருந்து கேரள மாநிலம் சாலக்குடிக்கு செல்லும் வழியில் உள்ள பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் கனமழையால் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வால்பாறை- அதிரப்பள்ளி சாலையில் உள்ள பாலத்தை தொட்டவாறு ஆற்றில் வெள்ளம் செல்வதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அதிரப்பள்ளி வழியாக வால்பாறை பகுதிக்கு வரும் வாகனங்கள் கேரளா பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல, வால்பாறையிலிருந்து கேரளாவுக்கு செல்லும் வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதிப்புக்குள்ளாகினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT