Published : 27 Sep 2021 03:21 AM
Last Updated : 27 Sep 2021 03:21 AM

மதுரையில் பிறந்தநாளையொட்டி - அரிவாளால் கேக் வெட்டிய இருவர் கைது :

பிறந்தநாளையொட்டி அரிவாளால் கேக் வெட்டியதாக மதுரையில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை செல்லூரைச் சேர்ந்த 2 பேர் தங்களது பிறந்த நாளை யொட்டி அரிவாளால் கேக் வெட்டிக் கொண்டாடிய காட் சியை வெளியிட்டனர். இதை அறிந்து செல்லூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது பிறந்த நாளுக்காக அரிவாளால் கேக் வெட்டியவர்கள் செல்லூர் கீழத்தோப்பு பகுதியைச் சேர்ந்த கோபிநாத்(20), சந்தோஷ்(21) என்பது தெரிய வந்தது. இதை யடுத்து இருவரும் கைது செய்யப் பட்டனர். அவர்களிடம் இருந்து அரிவாள், கத்தியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இவர்கள் அரிவாளால் கேக் வெட்டிய காட்சியை பின்னணி இசையுடன் சேர்த்துக் கொடுத்த மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்ததாகவும், கைதான இருவர் மீதும் சில வழக்குகள் நிலுவை யில் இருப்பதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x