Published : 25 Sep 2021 03:32 AM
Last Updated : 25 Sep 2021 03:32 AM
உடுமலை:தாராபுரம் அடுத்துள்ள பஞ்சப்பட்டி கிராமத்தில் சிலர் அனுமதியின்றி கிராவல் மண் எடுத்துச் செல்வதாகவும், அமராவதி ஆற்றில் இருந்து முறைகேடாக மணல் எடுக்கப்பட்டு, விற்பனை செய்யப்படுவதாகவும் வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு வட்டாட்சியர் சைலஜா தலைமையில் வருவாய்த் துறையினர் தொடர்புடைய பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்தது, தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT