Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
ராமேசுவரம் அருகே மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நின்ற லாரி மீது கார் மோதியதில் வட மாநிலஇளைஞர் உயிரிழந்தார்.
ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி நேற்று அதி காலையில் சென்ற கார், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மெய்யம்புள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண் ணீர் லாரி மீது மோதியது.
இதில் காரில் பயணித்த உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிமன்யு(17) உயிரிழந் தார். உடன் பயணித்த உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சேசாங் (26), உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சிவாங் தியாகி (16), வேப்பூ (13) மற்றும் ராமேசுவரம் வாகன ஓட்டுநர் புகாரி (23) ஆகியோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தங்கச்சிமடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT