Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM

மத்திய அரசை கண்டித்து - மதுரையில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் :

மத்திய அரசை கண்டித்து மது ரையில் திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் திமுக கூட்டணி சார்பில் மதுரையில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு எம்எல்ஏ கோ.தளபதி தலைமையில் அவரது வீட்டின் அருகே கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. சு.வெங்கடேசன் எம்பி உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.அண்ணாநகரில் மாநகர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் பொன். முத்துராமலிங்கம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பூமி நாதன் எம்எல்ஏ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஜின்னா திடலில் நடந்த ஆர்ப் பாட்டத்தில் மார்க்சிஸ்ட் செயலர் விஜயராஜன், விசிக செயலர் கதிரவன், மமக நிர்வாகி சேக் இப்ராகிம், சிபிஐ செயலர் நந்தா சிங், மதிமுக தொழிற்சங்க நிர்வாகி மகபூப்ஜான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப் பாட்டம் நடந்தது. வாடிப்பட்டி பஸ் நிலையம் முன் திமுக முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதேபோன்று, மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x