Published : 21 Sep 2021 03:20 AM
Last Updated : 21 Sep 2021 03:20 AM
காரிமங்கலம் அருகே அனுமதியின்றி ஏரியில் நொரம்பு மண் எடுத்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பொக்லைன் உள்ளிட்ட வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம் போலீஸார் நேற்று முன்தினம் காரிமங்கலம் சந்தைப்பேட்டை பின்பகுதியில் உள்ள நாகலேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஏரியில் டிப்பர் லாரி ஒன்றில் பொக்லைன் மூலம் நொரம்பு மண்ணை சிலர் எடுத்துக் கொண்டிருந்தனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், காரிமங்கலம் அடுத்த மருளுகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்த குமார் (30), இளவரசன் (29), சரவணன் (32) என்பதும் அனுமதியின்றி மணல் எடுத்தது தெரிந்தது. இதையடுத்து, 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
மேலும், மணல் அள்ள பயன்படுத்திய பொக்லைன் மற்றும் டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT