Published : 21 Sep 2021 03:21 AM
Last Updated : 21 Sep 2021 03:21 AM
திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் ‘பேராசிரியர் சாலை இளந்திரையன் புலமை நலம்’ என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. உலக திருக்குறள் தகவல் மைய தலைவர் பா. வளன் அரசு தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட திருவருட் பேரவை தலைவர் ப.தி. சிதம்பரம் நூலை வெளியிட்டார். இரா. முருகன் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். செ. பிரமசக்தி திருக்குறள் வாழ்த்து பாடினார். க.ஞா. ஜாண்பீற்றர் வரவேற்றார். ‘தமிழ்- தமிழன்- தமிழ்நாடு’ என்ற தலைப்பில் திருநெல்வேலி மாவட்ட திருக்குறள் பேரவை தலைவர் அ. ராசகிளி, நகைச்சுவையின் பெருமை குறித்து கி. பிரபா ஆகியோர் உரையாற்றினர். முனைவர் வை.ராமசாமி நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT