Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை உடனே திறக்க வேண்டும் என ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின், மாநிலச் செயற்குழு கூட்டம் மதுரையில் நேற்று நடந்தது. மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்றார்.
இக்கூட்டத்தில், கரோனா தொற்றால் ஒன்றரை ஆண்டுகளாக மூடியிருக்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை (1 முதல் 8-ம் வகுப்பு) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழக வழிகாட்டுதலின்படி உடனடியாகத் திறக்கவேண்டும். கடலூரில் நடந்த ஆசிரியர் தின விழாவில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் குறித்து தவறான கருத்து தெரிவித்த அமைச்சரின் பேச்சுக்கும், கரோனா ஊரடங்கின்போது பள்ளியை பார்வை யிட்ட கரூர் மாவட்ட ஆட்சியர் கூறிய சர்ச்சைக்குரிய பேச்சுக்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.
கூட்டத்தில் மாநிலப் பொதுச்செய லாளர் ச.மயில், கூட்டணியின் துணை பொதுச்செயலாளர் கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் ஜெ.மத்தேயு நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT