Published : 20 Sep 2021 03:20 AM
Last Updated : 20 Sep 2021 03:20 AM
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ராஜாகோயில் பகுதியைச் சேர்ந்தவர் நேதாஜி (50). இவர், கூட்டுறவு துறையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் தங்க நகைகள், 3 ஆயிரம் ரொக்கப் பணம், வெள்ளிப்பொருட்கள் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT