Published : 19 Sep 2021 03:14 AM
Last Updated : 19 Sep 2021 03:14 AM
புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக் கென தனி கல்வி வாரியம் அமைப் பது குறித்து, மாணவர்களின் நலன் கருதி யூனியன் பிரதேச அரசு உரிய நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்ரீதர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த மனுவில் கூறியிருப் பதாவது:
புதுச்சேரி யூனியன் பிரதேசத் தில், தமிழ்நாடு அரசின் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது. புதுச்சேரியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கென தனி பாட திட்டத்தை வகுக்கவும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கென தனி கல்வி வாரியம் அமைக்கவும் புதுச்சேரி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது நீதிபதிகள், புதுச் சேரி மாணவர்களின் நலன் கருதி தனி கல்வி வாரியம் அமைப்பது என்பது சிறப்பானதாக இருக்கும். இருந்த போதும் இதுசம்பந்த மாக புதுச்சேரி அரசு அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும், என கருத்து தெரிவித்தனர்.
மேலும் இதுதொடர்பாக புதுச் சேரி கல்வித்துறை செயலாளருக்கு 4 வாரங்களில் புதிய கோரிக்கை மனுவை மனுதாரர் அளிக்க வேண்டும் என்றும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அதிகரித் துள்ள பள்ளிகளின் எண்ணிக்கை, தனிப்பட்ட பாடத்திட்டம் வழங்கு வதின் தேவை ஆகியவற்றை பரிசீலித்து புதுச்சேரி அரசு 12 வாரங்களில் தகுந்த முடிவை எடுத்து, மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும்.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விஷ யத்தில் புதுச்சேரி அரசு, விரைந்து, தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்து, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT