Published : 19 Sep 2021 03:15 AM
Last Updated : 19 Sep 2021 03:15 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மதுரா கோட்ஸ், ஜேகே பென்னர் உள்ளிட்டவை இணைந்து ரூ.90 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைத்துள்ளன.
இந்த மையத்தை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், பி.மூர்த்தி ஆகியோர் இன்று திறந்து வைக்கின்றனர். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன், டீன் ரத்தினவேலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த ஆக்சின் உற்பத்தி மையம் திறக்கப்பட உள்ளதையடுத்து, மருத்துவமனையில் கூடுதலாக 250 ஆக்சிஜன் வசதியுடைய படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT