Published : 04 Sep 2021 03:14 AM
Last Updated : 04 Sep 2021 03:14 AM
கல்குவாரியால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்ததையடுத்து, அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்தனர்.
கோவை மாவட்டம் கிணத் துக்கடவு அருகேயுள்ள வீரப்ப கவுண்ட னூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரியில் வெடி வைத்து பாறைகளை தகர்க்கும்போது, வீடுகளில் அதிர்வு ஏற்படுவதாகவும், நீர்நிலைகள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழக பாஜக விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் அப்பகுதிக்கு சென்று வீடுகள் மற்றும் விளைநிலங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, தொடர்புடைய கல்குவாரியில் வருவாய்த் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்து சென்றனர்.
இதுகுறித்து, ஜி.கே.நாகராஜ் கூறும்போது, “தனியாருக்கு சொந்தமான கல்குவாரியில் வவிதிமீறல்கள் குறித்து கேள்வியெழுப்பிய விவசாயிகள் மிரட்டப்பட்டுள்ளனர். இதனால் தொடர்புடைய இடத்தை பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தேன். இவ்விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் எந்த விஷயத்தையும் நாங்கள் எதிர்ப்போம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT