Published : 04 Sep 2021 03:15 AM
Last Updated : 04 Sep 2021 03:15 AM
மாணவ, மாணவிகளின் திறன் மேம்பாட்டுக்காக ஹெச்சிஎல் நிறுவனம் மாநகராட்சி பள்ளிகளுக்கு 92 கணினிகளை வழங்கியது.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டு வந்தது. இந்த நெருக்கடியான கால கட்டத்தில் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் படிப்புத் திறனை வளர்ப்பதற்கும், ஆன்லைன் மூலம் கல்வி கற்பதற்கும், தொழில் திறனை மேம்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த சிந்தனையை வளர்க்கவும், பள்ளிகளில் தொழில்நுட்ப கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கும் ஹெச்சிஎல் நிறுவனம் மாநகராட்சியின் 14 மேல்நிலைப் பள்ளிகளுக்கு 92 கணினிகளை வழங்கியது.
ஹெச்சிஎல் நிறுவனத்தின் செயல் இயக்குநர் திருமுருகன், துணை பொது மேலாளர் பிரகாஷ்ராமன், மேலாளர் பிரிஜோ ஆகியோர் மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயனிடம் கணினிகளை வழங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT