Published : 13 Aug 2021 03:15 AM
Last Updated : 13 Aug 2021 03:15 AM

ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயற்சி :

கோவை அவிநாசி சாலை, தென்னம்பாளையம் பிரிவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் உள்ளது. இரண்டு இளைஞர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு இந்த ஏடிஎம் மையத்துக்கு வந்தனர். இரும்புக் கம்பியால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றனர். சத்தம் கேட்டு, அங்கு வந்த பொதுமக்கள், கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரை சூலூர் போலீஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ரோகித்(21) என்பதும், சூலூரில் உள்ள சுண்ணாம்பு கம்பெனியில் வேலை செய்து சமீபத்தில் அங்கிருந்து விலகியதும் தெரியவந்தது.

போலீஸார் வழக்கு பதிந்து தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x