Published : 11 Aug 2021 03:16 AM
Last Updated : 11 Aug 2021 03:16 AM

கஞ்சா விற்றவர் கைது :

ஆனைமலை பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்பியின் தனிக்குழு எஸ்ஐ முரளி, காவலர்கள் சாந்தகுமார், சுரேஷ் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு ஆனைமலையை அடுத்த மணக்கடவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த மோகன்ராஜ் (33) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மீனாட்சிபுரத்தை சேர்ந்த அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x