Published : 09 Aug 2021 03:17 AM
Last Updated : 09 Aug 2021 03:17 AM

வட்டாட்சியரிடம் வாக்குவாதம் செய்த 20 பேர் மீது வழக்கு :

சிங்கம்புணரி அருகே அணைக்கரைப்பட்டியில் புதிய துணை சுகாதார நிலையம் கட்ட அரசு அனுமதி வழங் கியது. இந்நிலையில், அணைக் கரைப்பட்டியில் போதிய இடம் இல்லை எனக் கூறி, பாரதி நகரில் சுகாதார நிலையம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு அணைக்கரைப்பட்டி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5-ம் தேதி சிங்கம்புணரி வட்டாட்சியர் திருநாவுக்கரசுவிடம் வாக்கு வாதம் செய்தனர்.

இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசன் அளித்த புகாரின் பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 20 பேர் மீது சிங்கம்புணரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x