Published : 01 Aug 2021 06:29 AM
Last Updated : 01 Aug 2021 06:29 AM

மாநகராட்சி அலுவலகத்தில் பணியாளர் பற்றாக்குறை :

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள வரி வசூலிப்பு பிரிவு, குடிநீர் வழங்கல், மக்கள் தொடர்பு அலுவலகம், சுகாதார பிரிவு அலுவலகங்களில் பணியாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, “தூய்மைப் பணிக்காக தேர்வு செய்யப்பட்டு, அலுவலக பணிகளில் இருந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மீண்டும் தூய்மைப் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், பிரிவு அலுவலகங்களில் உதவியாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 2 அல்லது 3 பேர் இருந்த இடங்களில் தற்போது ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இதுகுறித்து ஆணையர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, வெவ்வேறு பிரிவு அலுவலகங்களில் கூடுதலாக உள்ள பணியாளர்கள் தேவைப் படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x