Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

நாட்றாம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு மறியல் :

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி அடுத்த வெள்ளநாயக்கனேரி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பச்சூர்-திருப்பத்தூர் சாலையில் காலிக்குடங்களுடன் நேற்று காலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ் வழியாக திருப்பத்தூர் நோக்கி வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்தனர்.

இதகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘எங்கள் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. பல தெருக்களில் குழாய் அமைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.எனவே, குடிநீர் கேட்டு மறியலில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர்.

தகவலறிந்த நாட்றாம்பள்ளி வட்டாட்சியர் மகாலட்சுமி மற்றும் திம்மாம்பேட்டை காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஓரிரு நாளில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியர் மகாலட்சுமி உறுதியளித்தார். அதன் பேரில் மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x