Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM

விவசாயிகள் சான்று பெற இன்று சிறப்பு முகாம் :

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 22 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் சிறு, குறு விவசாயிகள் சான்று பெறுவதற்கான சிறப்பு முகாம் இன்று நடைபெறவுள்ளது என ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பயன்பெறுவதற்கான சான்று வழங்கும் சிறப்பு முகாம் இன்று (ஜூலை 31-ம் தேதி) வருவாய் ஆய்வாளர்கள் அலுவலகங்களில் நடைபெறவுள்ளன. மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்துக்காக ரூ.21.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தில் பயன்பெற உள்ள சிறு, குறு விவசாயிகள் அதற்கான சான்றிதழை பெறுவதற்காக 22 வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் பங்கேற்று பயன்பெறலாம். இணையதளத்தில் ஏற்கெனவே பதிவு செய்த விவசாயிகளுக்கு இன்று தகுதியின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படும். இந்த வாய்பை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x