Published : 31 Jul 2021 03:16 AM
Last Updated : 31 Jul 2021 03:16 AM
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம் பாளையம் புது சாந்தா தெருவில் வசிப்பவர் கதிரேசன்(29), அன்னை சத்யா நகரில் வசிப்பவர் நவீன்குமார்(20). இவர்கள் இருவரும், ஆரணி காமராஜர் சிலை முன்பு நேற்று மது போதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பொது சொத்துக்களை சேதப்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட முயன்றுள்ளனர். இந்த தகவலறிந்த ஆரணி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கதிரேசன், நவீன்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT