Published : 29 Jul 2021 03:15 AM
Last Updated : 29 Jul 2021 03:15 AM
சோளிங்கர் அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கி யுள்ளது என கல்லூரி முதல்வர் ரங்க நாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த ஜம்புகுளத்தில் உள்ள அரசினர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
இங்கு, இளநிலை படிப்பில் தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்.சி., கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கான சேர்க்கைக்கு www.tngasa.org மற்றும் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் ‘ஆன்லைன்’ வழியாக விண்ணப்பிக்க லாம். வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை பதிவு செய்ய முடியும்.
ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.48 மற்றும் பதிவுக் கட்டணம் ரூ.2 என மொத்தம் ரூ.50 செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பதிவுக்கட்டணம் ரூ.2 மட்டுமே செலுத்தினால் போதுமானது. விண் ணப்பத்தின் பதிவு கட்டணத்தை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் வாயிலாக செலுத்தலாம்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT