Published : 28 Jul 2021 03:17 AM
Last Updated : 28 Jul 2021 03:17 AM

கரோனாவால் பள்ளி செல்லாதவர்களின் கல்விக்கு உதவும் பெண் ஊராட்சி தலைவர் :

மதுரை

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், திண்டியூர் ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர். இவர் தனது ஊராட்சிக்குட்பட்ட வீரபாஞ்சான், ஓடைபட்டி, ராணுவக் குடியிருப்பைச் சேர்ந்த பள்ளி செல்லாத குழந்தைகள் கல்வி பயில ஏற்பாடு செய்துள்ளார். இதற்காக படித்து வேலை தேடும் மாற்று திறனாளி பெண்கள், கணவரை இழந்த பெண்களை ஆசிரியர்களாக நியமித்து ஊதியம் வழங்கி கல்வி போதிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு சத்தான பயறு வகைகள், இலவச நோட்டு, புத்தகம் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். இதனால் இப்பகுதியில் இலவசமாக பயில வரும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் லெட்சுமி சந்திரசேகர் கூறுகையில், எங்கள் முயற்சிக்கு தன்னார்வ அமைப்புகள் உதவ முன் வந்துள்ளன என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x