Published : 27 Jul 2021 03:14 AM
Last Updated : 27 Jul 2021 03:14 AM
மதுரையில் மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் பஸ் நிலையங்களில் இருசக்கர வாகன ‘பார்க்கிங்’ காப்ப கங்கள் உள்ளன.
இந்தக் காப்பகங்களில் பைக்குகளை நிறுத்த 12 மணி நேரத்துக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூ.6 வசூலித்தனர். தற்போது மாநகராட்சி இந்த இருசக்கர வாகன காப்பகங்களையும் டெண்டர் விட தீர்மானித்துள்ளது. அதற்காக பார்க்கிங் கட்டணத்தை ரூ.6-லிருந்து ரூ.10 ஆக உயர்த்தி மாநகராட்சி நிர்ணயம் செய்தது.
இதற்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
அதனால், மாநகராட்சி பார்க்கிங் கட்டணத்தைக் குறைக்க முடிவெடுத்துள்ளது.
மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் இரு சக்கர வாகனக் காப்பகங்களில் உயர்த்தப்பட்ட பார்க்கிங் கட்டணம் ரூ.10-லிருந்து ரூ.8 ஆக குறைத்துள்ளது. ஆனால், மக்கள், பழைய கட்டணம் ரூ.6 ஆகக் குறைக்க எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT