Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
மதுரையில் நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தில் பங்கேற்க அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் ஜூலை 21-ல் மதுரை வந்தார். அவர் இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் உள்ளார். இதனால் மோகன் பகவத் தங்கியிருக்கும் சத்யசாய் நகர் பகுதியை சுத்தமாகப் பராமரிக்க, மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இருந்த சண்முகம் உத்தரவிட்டார்.
இதை சு.வெங்கடேசன் எம்.பி. அரசியலாக்கியதுடன், மாநகராட்சி உதவி ஆணையரை மிரட்டியுள்ளார். இதையடுத்து உதவி ஆணையர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதைக் கண்டிக்கிறோம். மாநகராட்சி உதவி ஆணையரை அதே பணியில் நியமிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனை இடமாற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT