Published : 26 Jul 2021 03:13 AM
Last Updated : 26 Jul 2021 03:13 AM
ஆரப்பாளையம் மண்டல் நிர்வாகிகள் கூட்டம் மண்டல் தலைவர் கார்த்திக் தலைமையில் நடந்தது. மாநில இளைஞரணி முன்னாள் தலைவர் சசீஷ் போன்ஸ், மாநிலச் செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர்கள் செண்பகப்பாண்டியன், கே.காந்திகுமாரி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் மதுரை மாநகராட்சி 8, 9-வது வார்டு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று பூங்கா, பூப்பந்து உள் விளையாட்டரங்கம் அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தில் அமைக்கப்படும் வைகை கரை சாலைக்கு பிரதமர் மோடி பெயர் சூட்ட வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT