Published : 24 Jul 2021 03:13 AM
Last Updated : 24 Jul 2021 03:13 AM

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை - அம்மன் கோயில்களில் திரண்ட பக்தர்கள் :

ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மதுரை மீனாட்சியம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம் மன் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில், அழகர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் திரளான பெண்கள் வழிபாடு நடத்தினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சிவகங்கை

மடப்புரம் காளியம்மன் கோயில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில், தாயமங் கலம் முத்துமாரியம்மன் கோயி லில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திண்டுக்கல்

திண்டுக்கல் கோட்டை மாரியம் மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு நேற்று காலை முதலே திரளான பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. நத்தம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், வத்திரா யிருப்பு அருகே சதுரகிரி மலை யில் நேற்று ஒரே நாளில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x