Published : 23 Jul 2021 07:13 AM
Last Updated : 23 Jul 2021 07:13 AM

நத்தம் அருகே கார் மோதி தந்தை, மகன் உயிரிழப்பு :

நத்தம்

நத்தம் அருகே சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (50). கிளை தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருந்தார். இவரது மகன் ஜெய் ராம்கணேஷ் (14). ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு இருவரும் நத்தத்திலிருந்து சேக்கிபட்டிக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். ஏரக் காய்பட்டி அருகே சென்ற போது பின் னால் அதிவேகமாக வந்த கார் பைக் மீது மோதியது. இதில் தந்தையும், மகனும் அதே இடத்தில் உயிரிழந்தனர். நத்தம் போலீஸார் வழக்குப் பதிந்து, தப்பி ஓடிய கார் ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x