Published : 21 Jul 2021 03:15 AM
Last Updated : 21 Jul 2021 03:15 AM
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கையெழுத்து இயக்கம் மற்றும் நூதன போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுபோல் பல்வேறு கட்சி, அமைப்பினரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத் தினர் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலைஉயர்வை கண்டித்து, காஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்துபுழுதி தூற்றி நூதனமான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாஸ்பேட்டை உழவர்சந்தை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு உழவர்கரை கமிட்டி தலைவர் பெரிய நாயகி தலைமை தாங்கினார். கமிட்டி செயலாளர் முனியம்மாள் கண்டன உரையாற்றினார். புதுச்சேரி தலைவர் சந்திரா, துணைத் தலைவர் இளவரதி மற்றும் மாதர் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பொருளாளர் சுகுணா நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT