Published : 19 Jul 2021 03:14 AM
Last Updated : 19 Jul 2021 03:14 AM

சேத்துப்பட்டு அருகே பாமக ஆண்டு விழா :

திருவண்ணாமலை: பாமகவின் 33-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி கொடியேற்றும் நிகழ்ச்சி திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தில் நடைபெற்றது.

பாமக மற்றும் வன்னியர் சங்கக் கொடியை முன்னாள் எம்பி துரை ஏற்றி வைத்தார். மாநில தேர்தல் பிரச்சாரக் குழுத் தலைவர் எதிரொலி மணியன், மாநில துணை பொதுச் செயலாளர் வேலாயுதம், மாநில துணை அமைப்பு செயலாளர் ஏழுமலை, மாவட்ட வன்னியர் சங்கத் தலைவர் பிச்சைக்கண்ணு, மாவட்ட துணைச் செயலாளர் சம்பத் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x