Published : 17 Jul 2021 03:14 AM
Last Updated : 17 Jul 2021 03:14 AM

ரூ.50 லட்சம் நில அபகரிப்பு வழக்கில் 4 பேர் கைது :

வேலூரைச் சேர்ந்தவர் சுகுணா (80). இவருக்கு திருநின்றவூர் பிரகாஷ் நகரில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் உள்ளது. இந்நிலையில், கடந்த 2017-ல் சுகுணாவைப் போல ஆள்மாறாட்டம் செய்து, ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் போலி ஆவணங்கள் மூலம் சிலர் நில அபகரிப்பில் ஈடுபட்டனர்.

இதையறிந்த சுகுணா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவின் நில மோசடி தடுப்பு சிறப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர்.

இதில், ஆள்மாறாட்டம் செய்து, நிலத்தை அபகரித்ததாக திருநின்றவூர் ராம் நகரைச் சேர்ந்த மோகன்(56), நடுகுத்தகை அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ஜெய்சங்கர் (55), அப்பாஸ் அலி(58), நல்லூர் குமணன் (44) ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். மேலும், சிலரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x