Published : 13 Jul 2021 03:14 AM
Last Updated : 13 Jul 2021 03:14 AM
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில், ஊரக வளர்ச்சித் துறை ஊழல் துறையாக இருந் ததாக அத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் குற்றம் சாட்டினார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்த அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஊரக வளர்ச்சித்துறை பல குளறுபடிகளுடன் ஊழல் நிறைந்த துறையாக இருந்துள்ளது. எந்த நோக்கத்துக்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ, அதற்கு போய் சேராமல் அரசு நிதி பாழடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குளறுபடிகள் அனைத்துக்கும் படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
கிராம மக்களுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளைக் கொண்டு போய் சேர்க்கும் வகை யில் ஊரக வளர்ச்சித் துறையை புத்துயிர் பெற்ற துறையாக்கும் வகையில் பணிகளை தொடங்கி உள்ளோம்.
தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி கச்சத்தீவை மீட்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபடும்.
நாட்டிலேயே 100 சதவீத தடுப்பூசி செலுத்திய மாநிலமாக தமிழகத்தை ஆக்கும் முயற்சி யில் முதல்வர் ஸ்டாலின் ஈடு பட்டுள்ளார்.
ராமநாதசுவாமி கோயில் தீர்த் தங்களை திறக்க தமிழக அரசு ஓரிரு வாரங்களில் நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் கூறி னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT