Published : 25 Jun 2021 03:13 AM
Last Updated : 25 Jun 2021 03:13 AM
கரோனா ஊரடங்கு காரணமாக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மளிகை, மருந்து கடை உள்ளிட்ட குறிப்பிட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களை மட்டுமே திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி தபால்நிலையம் எதிரே தனியார் நகை கடன் நிறுவனம் அனுமதியின்றி திறக்கப்பட்டு செயல்பட்டு வருவதாக வருவாய் துறைக்கு புகார் வந்தது. இதையடுத்து, துணை வட்டாட்சியர் சுப்ரியா தலைமையில் சென்ற வருவாய்த் துறை அதிகாரிகள், நகை கடன் நிறுவனத்துக்கு நேற்று ‘சீல்’ வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT